போலீஸ் வழக்குப்பதிவு சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

கம்பம், பிப். 13: உழவர் சங்கம் மற்றும் சாரதிகள் நலச்சங்கம் சார்பில் சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டி உழவர் சங்கம் மற்றும் இரட்டை மாட்டு வண்டி சாரதிகள் நலச்சங்கம் சார்பில் நேற்று சுருளி அருவி சாலையில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் தேன் சிட்டு, தட்டான் சிட்டு, புள்ளிமான் சிட்டு, முயல் சிட்டு ஆகிய பிரிவுகளில் 60க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி ஜோடிகள் கலந்து கொண்டன.சுருளி அருவிச்சாலையில் நடைபெற்ற போட்டியில் மாடுகளின் வயது, பிரிவுகளை வைத்து போட்டி தூரம் நிர்ணயிக்கப்பட்டது. வெற்றிபெற்ற மாடுகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமைதாரர்களுக்கு தேனி மாவட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரராகவன் பரிசுகள் வழங்கினார்.ராயப்பன்பட்டி எஸ்ஐ ஜெய்கணேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். கம்பம், கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமபுறங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஆர்வத்துடன் மாட்டுவண்டி பந்தையத்தை கண்டுகளித்தனர்.

Related Stories: