பாதையை அடைத்தவர் மீது சரமாரி தாக்குதல் சொந்த தோப்பில் இருந்த பாதையை அடைத்தவர் மீது சரமாரி தாக்குதல்

தேனி, பிப். 13: தேனியில் தென்னந்தோப்பு உரிமையாளர் தனது தோப்பில் முள்வேலி அமைத்ததால் நடைபாதையாக பயன்படுத்தியோர் சிலர் தோப்பு உரிமையாளரை சரமாரியாக தாக்கினர்.தேனி அம்பேத்கர் நடுத்தெருவில் குடியிருப்பவர் சக்திவேல்(52). இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு தேனி காட்டு பத்ரகாளியம்மன் கோயில் அருகே உள்ளது. இந்த தோப்புக்கு அருகே பள்ளிவாசல் குடியிருப்போர் சிலர் தோப்பு வழியாக நடந்து சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக சக்திவேல் தோப்புக்கு அருகே பள்ளிவாசல் தெருவில் குடியிருப்போர் நடந்து சென்று வந்த பாதையை முள்வேலிபோட்டு அடைத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பள்ளிவாசல் தெருவை சேர்ந்த செந்தில், மகேஸ் மற்றும் சிலர் சேர்ந்து, தென்னந்தோப்பு உரிமையாளர் சக்திவேலை ஏன் நடைபாதையை அடைத்தாய் எனக் கேட்டு அசிங்கமாக பேசியும், கம்பால் சரமாரியாக அடித்தனர்.இதில் காயமடைந்த சக்திவேல் தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சக்திவேல் அளித்த புகாரின்பேரில் தேனி போலீசார் செந்தில், மகேஸ் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: