ஹெல்மெட் அணிய வலியுறுத்தி பாம்பனில் விழிப்புணர்வு பேரணி

மண்டபம், பிப்.13: தமிழக அரசு வாகன ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு வாரங்களை தொடர்ந்து பல்வேறு விதமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதுபோல் பாம்பன் தீவு வாட்ஸ்அப் குழுவினர்கள் சார்பில் சாலைகள் பாதுகாப்பு வாரவிழா பாம்பன் பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு ராமேஸ்வரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். சப்.இன்ஸ்பெக்டர் சுதாகர் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர் வரவேற்றார். பாம்பன் ஊராட்சி பகுதியில் இருந்து அக்காள்மடம் வரை இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலைகளில் இருச்சக்கர வாகனங்கள் ஓட்டி செல்பவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனம் ஓட்டிகள் சீட் பெல்ட் அணிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து துண்டு பிரசுரத்தை வாகன ஓட்டிகளுக்கு வழங்கி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

Related Stories: