கோவில்பட்டி, பிப்.13: கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த ஆண்டு ஏப்.27ம் தேதி நடந்தது. இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.கோவில்பட்டி கூட்டுறவு சார்பதிவாளர்கள் முருகவேல், செண்பகவல்லி, விளாத்திகுளம் சார் பதிவாளர் தமிழ்செல்வன், பாண்டவர்மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ஜெபஸ்டின் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் தலைவராக போட்டியிட்ட அன்புராஜ் மற்றும் உறுப்பினர்களாக போட்டியிட்ட சுப்புத்தாய், சூசைமாணிக்கம், முத்துக்குமார், சுந்தரபாண்டியன், ராமசாமி, தங்கராஜ், சண்முகசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதற்கான ஆணையை அதிகாரிகள் வழங்கினர். அன்புராஜ் மீண்டும் தலைவராக போட்டயிட்டு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆபிரகாம்அய்யாத்துரை, ராசையா, வேலுமணி, துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.