மின்வாரிய அதிகாரியின் கார் மீது தாக்குதல்

தூத்துக்குடி,பிப்.13: தூத்துக்குடியில் மின்வாரிய அதிகாரியின் காரை அடித்து நொறுக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.தூத்துக்குடி லோகியா நகரை சேர்ந்தவர் அந்தோணி. இவர் மின்வாரிய அதிகாரியாக உள்ளார். இவர் தனது காரை நேற்று வீட்டருகே நிறுத்தியிருந்தார். அப்போது நள்ளிரவில் பைக்கில் வந்த மர்ம நபர் இவரது கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் காரின் கண்ணாடிகள் மற்றும் பக்கவாட்டு பகுதிகள் நொறுங்கி சேதமடைந்துள்ளன. தகவலறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: