தூத்துக்குடியில் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பயிற்சி முகாம்

தூத்துக்குடி, பிப்.13: தூத்துக்குடியில் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்டத்திலுள்ள பள்ளிகளின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில் மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வெள்ளைசாமி வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகேசன் தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா பயிற்சி கையேட்டை வெளியிட்டார். இதில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சீனி, சங்கரய்யா, அனைவருக்கும் இடைநிலை கல்வி உதவி திட்ட இயக்குநர் சுப்பிரமணியன் வாழ்த்தி பேசினர்.இதில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பென்சர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி பல்லுயிர் பெருக்கம் என்ற தலைப்பிலும், முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி பசுமைப்படை ஆசிரியர் சரவணக்குமார் தூய்மை பாரதம் என்ற தலைப்பிலும், தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளி பசுமைப்படை ஆசிரியர் ராஜ்குமார் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் பேசினர். பசுமைப்படை ஆசிரியர் அருள்சகாயம் நன்றி கூறினார்.

Related Stories: