அறிவியல் கண்காட்சி போட்டி திருச்செந்தூர் பள்ளி மாணவி சாதனை

திருச்செந்தூர், பிப். 13: அறிவியல் கண்காட்சி போட்டியில் திருச்செந்தூர் சரவணய்யர் நடுநிலைப்பள்ளி மாணவி மாநில அளவில் சாத னை படைத்தார். தூத்துக்குடி பிஎம்சி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவியல் கண்காட்சி போட்டி நடந்தது. இதில் மாவட்ட அளவில் 110 பள்ளிகள் கலந்து கொண்டன. போட்டியில் மாணவ, மாணவிகள் பலர் தங்களது படைப்புகளை பல்வேறு அறிவியல் தலைப்புகளில் வைத்திருந்தனர். இறுதியில் 11 பேர் தேர்தெடுக்கப்பட்டனர். இதில் திருச்செந்தூர் சரவணய்யர் நடுநிலைபள்ளியின் 7ம் வகுப்பு மாணவி ஜெயராமவர்ணா 5ம் இடம் பிடித்து மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டார். இளம்விஞ்ஞானி பட்டம் பெற்று சாதனை படைத்த மாணவி ஜெயராமவர்ணாவை பள்ளி தாளாளர் ராமச்சந்திரன், தலைமையாசிரியை உஷா, பட்டதாரி ஆசிரியை குணசுந்தரி, ஆசிரியை சாந்தி மற்றும் ஆசிரிய, ஆசிரியர் கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.

Related Stories: