தென்திருப்பேரை அருகே வாகன சோதனையால் விரக்தி விவசாயி விஷம் குடித்து சாவு

வைகுண்டம், பிப்.13: குரங்கணியை சேர்ந்த விவசாயி கேசவன்(46). இவர் மனைவியுடன் கடந்த 6ம் தேதி பைக்கில் ஆழ்வார்திருநகரி நோக்கி சென்றார். மாவடிப்பண்ணை அருகே ஆற்றங்கால் பகுதியில் ஆழ்வார்திருநகரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  கேசவனை மறித்த போலீசார் லைெசன்ஸ் கேட்டு சோதனையிட்ட போது அவர் மது அருந்திய நிலையில் பைக் ஓட்டி வந்தது தெரிகிறது. இதனையடுத்து அவரது மனைவியை பஸ்சில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பிய போலீசார் கேசவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பின்னர் விடுவித்தனர்.   மனைவி முன்பு போலீசார் தன்னை அவமானப்படுத்தியதாக கருதிய கேசவன் மனமுடைந்து ஆழ்வார்திருநகரி முதல் பஸ் ஸ்டாப் அருகே விஷம் குடித்துவிட்டு மனைவியிடம்  செல்போனில் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் விரைந்து வந்து மயங்கி கிடந்த  கேசவனை மீட்டு வைகுண்டம் அரசு மருத்துவமணையில் சேர்த்தார்.  மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேசவன் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: