சுடுகாட்டுக்கு பாதை கேட்டு பாவூர்சத்திரத்தில் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

பாவூர்சத்திரம், பிப்.13: மேலப்பாவூர் மேற்கு பகுதி மற்றும் குலசேகரபட்டி தேவேந்திரகுலம் மற்றும் ஆதிதிராவிட சமுதாய மக்கள் பயன்படுத்தி வந்த மேலப்பாவூர்-குறும்பலாப்பேரி ரோட்டில் உள்ள சுடுகாட்டு பாதை ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது இறந்தவர்கள் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி வி.கே. புதூர் தாலுகா செயலாளர் ஐயப்பன் தலைமை வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் தென்காசி தாலுகா செயலாளர் அருணாசலம், மாநில குழு உறுப்பினர் போஸ், மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் இசக்கித்துரை மற்றும் பலர் பேசினர்.

Related Stories: