ஓர்க்ஷாப்பில் தீவிபத்து 4 பைக்குகள் எரிந்து நாசம்

தென்காசி, பிப்.13:   தென்காசி கீழப்பாளையம் தெருவை சேர்ந்த சங்கரன் மகன் நடராஜன் (35). இவர் குலசேகரநாதர் கோயில் அருகில் டூவிலர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். காலையில் இவரது ஒர்க்ஷாப்பிலிருந்து திடீரென புகை வருவதை அருகிலுள்ளவர்கள் பார்த்துள்ளனர். இது குறித்து தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.  நிலைய அலுவலர் பொறுப்பு செல்வம் ஏட்டு கணேசன், பூபாலன், சுடர்மணி ஆகியோர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் 4  இருசக்கர வாகனங்கள், காற்றடைக்கும் கம்ப்ரசர் மோட்டார், மற்றும் வாகனக்களின் ஆர்.சி. புத்தகங்கள் ஆகியவை தீயில் கருகி சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். சேத மதிப்பு இரண்டு லட்ச ரூபாய் ஆகும். இது குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறனர்.

Related Stories: