நல்லூர் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஆலங்குளம், பிப்.13:  ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி தாளாளர் நெல்சன் தலைமை வகித்தார். நெல்லை டிடிடிஏ திருமண்டல தலைவர் (பொ) பில்லி, லே செயலர் வேதநாயகம் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பீட்டர் பேரின்பராஜா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அலுவலர் அருளானந்தம் பட்டமளிப்பு உரையாற்றினார். பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுருளியாண்டி, 333 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்குப் பட்டம் வழங்கினார். விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் விஜய் ஸ்டான்லி, சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: