வசூல் மையங்கள், இணைய தளம் மூலம் மின்கட்டணம் செலுத்த முடியாது

நாகர்கோவில், பிப். 13:  கன்னியாகுமரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் டேவிட் ஜெபசிங் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாது: கன்னியாகுமரி மின்பகிர்மான வட்டத்தில் உள்ள அனைத்து மின்விநியோகப் பிரிவுகளிலும் கணிணி மென்பொருள் இடம் பெயர்வு நடைபெற இருப்பதால் வருகிற 16ம் தேதி மின்கட்டண வசூல் மையங்கள் செயல்படாது. வருகிற 15ம் தேதி மாலை 4 மணி முதல் 18ம் தேதி காலை 8 மணி வரை இணையதளம மூலமாகவும், மின் கட்டணம் செலுத்த இயலாது. மேலும் வருகிற 16ம் தேதி மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாளாக இருப்பின் அன்றைய தினத்தில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய மிக நுகர்வோருக்கு 18ம் தேதி மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாளாக நீட்டிப்பு செய்து கொடுக்கப்படும். மேலும் 18ம் தேதி திங்கள் காலை 8 மணி முதல் மின்கட்டண வசூல் மையங்கள் மற்றும் இணைய தளங்களில் வழக்கம் போல் மின் கட்டணம் செலுத்தலாம்.

Related Stories: