தக்கலை அருகே பஸ்சில் குழந்தையிடம் செயின் திருட்டு

நாகர்கோவில், பிப்.13: தக்கலை அடுத்த குமாரபுரம் மிக்கேல் நகர் பகுதியை சேர்ந்தவர் கென்சிலின் பிரபு (34). சம்பவத்தன்று இவர் தக்கலையில் இருந்து குமாரபுரம் நோக்கி அரசு பஸ்சில் பயணித்தார். அப்போது இவரது குழந்தை இடுப்பில் கட்டி இருந்த 2பவுன் தங்க கொடியை மர்ம நபர் அறுத்து எடுத்து சென்றார்.இது குறித்து கென்சிலின் பிரபு, கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: