வேலூர், பிப்.13: குடியாத்தம் அருகே மாயமான 15 வயது சிறுமி ஆந்திராவுக்கு கடத்தப்பட்டுள்ளதாக வந்த தகவலின் பேரில் சிறுமியை மீட்க தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.
குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி. இவர் கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். நீண்ட நேராமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கடந்த டிசம்பர் 31ம் தேதி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர். இருப்பினும் 50 நாட்களுக்கு மேலாகியும் சிறுமியின் நிலை குறித்து எந்தவித தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.