ஜோலார்பேட்டை அருகே பள்ளி மாணவனை கடத்தி கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் திருப்பத்தூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு

திருப்பத்தூர, பிப்.13: ஜோலார்பேட்டை அருகே பள்ளி மாணவனை கடத்தி கொலை செய்த வாலிபருக்கு திருப்பத்தூர் அமர்வு நீதிமனற நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள குடியானகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், ஆசிரியர். இவரது மகன் சத்தியமூர்த்தி(12). இவர் ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது தந்தையின் பைக்கை எடுத்து கொண்டு பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சத்தியமூர்த்தி மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அருகில் உள்ள ஒரு கிணற்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து, ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் குடியானகுப்பம் பகுதியை சேர்ந்த பைக் திருடன் முருகன்(34) என்பவர், ஒரு சிறுவனுடன் சேர்ந்து பைக்கை பறித்துக்கொண்டு சத்தியமூர்த்தியை சரமாரியாக தாக்கி கொலை செய்து அருகில் உள்ள கிணற்றில் சடலத்தை வீசியது தெரிய வந்தது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பத்தூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. வழக்கை நேற்று நீதிபதி இந்திராணி விசாரித்து முருகனுக்கு ஆயுள் தண்டனையும், ₹1500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து, ஜோலார்பேட்டை போலீசார் முருகனை கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: