வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 1 செய்முறை தேர்வு இன்று தொடக்கம்

வேலூர், பிப். 13: வேலூர் மாவட்டத்தில் 3 கட்டமாக பிளஸ்1 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கு பொதுதேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. பிளஸ்2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, பிளஸ்1 மாணவர்களுக்கான செய்முறை இன்று தொடங்குகிறது. அதன்படி, இந்தாண்டு வேலூர் மாவட்டத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வை 18 ஆயிரத்து 283 மாணவர்களும், 22 ஆயிரத்து 93 மாணவிகளும் என மொத்தம் 40 ஆயிரத்து 376 பேர் எழுத உள்ளனர். தொடர்ந்து பிளஸ்1 மாணவர்களுக்கு செய்முறை இன்று தொடங்குகிறது. இத்தேர்வை 26 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இன்று தொடங்கும் செய்முறை தேர்வு 22ம் தேதி வரை 3 கட்டமாக நடைபெற உள்ளது என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர.

Related Stories: