செங்கல்பட்டு, பிப்.13: செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் சையது உஸ்மான் தலைமையில் போராட்டம் நடத்தினர். இதையொட்டி, நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, பேரணியாக செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகம் சென்றனர். அங்கு தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர்.