பட்டப்பகலில் துணிகரம் 2 வீடுகளை உடைத்து கொள்ளை

கூடுவாஞ்சேரி, பிப்13: பட்டப்பகலில், ஒரே நாளில் 2 வீடுகளை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஜெயலட்சுமி நகரை சேர்ந்தவர் கௌதமன் (43). நேற்று முன்தினம் காலை கௌதமன், சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். மாலை அனைவரும் விடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 14 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. அதே பகுதியை சேர்ந்தவர் சீதாராமன் (55). நேற்று முன்தினம் சீதாராமன், காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். மாலை வீடு திரும்பியபோது, அவரது வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த லேப்டாப், ₹ 15 ஆயிரம் உள்பட சில பொருட்களை திருடி சென்றது தெரிந்தது.புகாரின்படி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: