இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்

திருவள்ளூர், பிப் 13: திருவள்ளூர் அடுத்த கல்லம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ரோஜா (29) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவரை மப்பேடு கிராமத்தை சேர்ந்த மணி மகன் சின்னராஜ்(29) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி ரோஜாவை சின்னராஜ் மப்பேடு ஏரிக்கரைக்கு அழைத்துச்சென்று, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரிடம் பேசுவதை சின்னராஜ் தவிர்த்துள்ளார். இதை தொடர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சின்னராஜை, ரோஜா வற்புறுத்தினார். இதற்கு சின்னராஜ் மறுத்தார். இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டதற்கு, அவரது சகோதரர் சிலம்பரசன்(31), ரோஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய  இன்ஸ்பெக்டர் பரிபூரணம் வழக்குப்பதிந்து, சின்னராஜ், அவரது சகோதரர் சிலம்பரசன்(31) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: