207 பெண்களுக்கு திருமண நிதியுதவி

திருத்தணி, பிப்.13: திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களை சேர்ந்த 207 பெண்களுக்கு 68 லட்சம் மதிப்பிளான திருமண நிதியுதவி வழங்கப்பட்டது.திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில், மகளிர் திட்ட மூலம் திருமண நிதியுதவி வழங்கும்நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், திருத்தணி எம்.எல்.ஏ. நரசிம்மன் பங்கேற்று திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களில் தேர்வு செய்யப்பட்ட 207 பயனாளிகளுக்கு தலா, ஒரு சவரன் தாலி, பிளஸ்2 வரை படித்தவர்களுக்கு தலா 25000 ரூபாய், டிகிரி படித்தவர்களுக்கு, தலா 50000 ரூபாய் என மொத்தம் 68.50 லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய ஆணையர் பாபு, ஆவின் தலைவர் சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், முன்னாள் சேர்மன் சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். திருத்தணி சமூக நலத்துறை அலுவலர் ஜீவதிலகம் நன்றி

கூறினார்.

Related Stories: