பொன்னேரி, பிப்.13: பொன்னேரி அருகே வீடு கட்ட சாலையில் குவித்து வைத்திருந்த மணல் திருடி வாகனத்தில் ெகாண்டு செல்ல முயன்றபோது சக்கரம் சேற்றில் சிக்கி நகராததால் தப்பியது. இதையடுத்து 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கஜா (50). இவர், அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். கட்டுமான பணிகளுக்காக 3 யூனிட் ஆற்று மணல் வாங்கி வீட்டின் அருகே குவித்து வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் கஜா தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டுள்ளது. உடனே எழுந்து வீட்டின் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது சரக்கு வாகனத்தில் 5 பேர் கொண்ட கும்பல் மணல் ஏற்றிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.