காக்களூரில் திமுக ஊராட்சி சபை குடிநீர், வீட்டுமனை பட்டா வழங்க மக்கள் மனு

திருவள்ளூர், பிப். 13: திருவள்ளூர் தெற்கு ஒன்றியம் காக்களூரில் நடந்த திமுக ஊராட்சி சபை கூட்டத்தில், அடிப்படை வசதிகள் செய்வதுடன் முறையாக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர். திருவள்ளூர் தெற்கு ஒன்றியம், காக்களூரில் திமுக ஊராட்சி சபை கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் த.எத்திராஜ் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் எஸ்.என்.குமார், பி.என்.சுகுமார், ராஜி, பாலாஜி, சக்கரவர்த்தி, வினோத், கருணாகரன், பூவண்ணன், ராஜேஷ், செந்தில், சங்கர், முருகன், மோகன், சீனிவாசன், பரத், பிரான்சிஸ், ரவி, ராகவன், கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் சவுந்தரராஜன் வரவேற்றார்.

இதில், தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் ஆகியோர் பொதுமக்களிடம் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தனர். அப்ேபாது, வீட்டுமனை பட்டா, தெரு மின்விளக்குகள், குடிநீர் வசதி, சாலை வசதி செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் மனு வழங்கினர். கூட்டத்தில், நிர்வாகிகள் பூவை சி.ஜெரால்டு, ஜெ.ரமேஷ், சொக்கலிங்கம், அன்பு ஆல்பர்ட், ஜெயபாலன், பிரேம்ஆனந்த், பா.நரேஷ்குமார், ஜெயபுகழேந்தி, விமல்வர்ஷன், கே.ஏ.அபி னாஷ், அரி, திலீப், அருண்கீதன், லாசர், டி.டி.தயாளன், பாலவிநாயகம், ஏழுமலை, ராமச்சந்திரன், சிவமணி, இ.என்.சேகர், வேலு, முரளி, மகளிரணி ரோஷி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: