திருவள்ளூர், பிப். 13: திருவள்ளூர் தெற்கு ஒன்றியம் காக்களூரில் நடந்த திமுக ஊராட்சி சபை கூட்டத்தில், அடிப்படை வசதிகள் செய்வதுடன் முறையாக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர். திருவள்ளூர் தெற்கு ஒன்றியம், காக்களூரில் திமுக ஊராட்சி சபை கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் த.எத்திராஜ் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் எஸ்.என்.குமார், பி.என்.சுகுமார், ராஜி, பாலாஜி, சக்கரவர்த்தி, வினோத், கருணாகரன், பூவண்ணன், ராஜேஷ், செந்தில், சங்கர், முருகன், மோகன், சீனிவாசன், பரத், பிரான்சிஸ், ரவி, ராகவன், கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் சவுந்தரராஜன் வரவேற்றார்.