சூளை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

சென்னை சூளை வாத்தியார் கந்தப்ப தெருவில் அமைந்துள்ள அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் ரதசப்தமி விழா 12ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று ரதசப்தமி விழா நடைபெற்றது. இன்று காலை 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. 14ம் தேதி 6 மணிக்கு ஊஞ்சல் சேவை மற்றும் விடையாற்றி பஜனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பட்டுமுரளி விட்டல் செட்டி, அரபிரகுலா எஸ்.குமார் செட்டி, ஏ. ஹரிகிருஷ்ண பாபு செட்டி, எம். பாஸ்கரன், அறங்காவலர்கள் ஆசூரு வி. சுப்புராயலு செட்டி, போளூர் எல், உமாபதி செட்டி, கோலே ஜி. உமாசங்கர் செட்டி அரிடாகுல ஆ்ர் சாய்கலா, டி. செல்வராஜ் செட்டி ஆகியோர் தலைமையில் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. சாது காமாட்சி சாரிட்டீஸ் நிர்வாகிகள் அன்னதானம், பிரசாதம் வழங்குதல் ஆகியவற்றை செய்து வருகின்றனர்.

Related Stories: