ஆலந்தூர்: ஆலந்தூர் புதுத்தெருவில் நகராட்சி கட்டிடத்தில் இயங்கி வந்த ஆலந்தூர் நீதிமன்றம் ஒருங்கிணைந்த நீதிமன்றமாக கடந்த 2011ம் ஆண்டு எம்.கே.சாலை அருகே 3 அடுக்கு புதியகட்டிடத்தில் திறக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தில் பராமரிப்பு பணிகள் தற்போது நடக்கிறது. அதன்படி, 3வது தள மொட்டைமாடியில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியினை பொதுப்பணித்துறை ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது தொட்டியின் ஒருபகுதி மொட்டைமாடி தடுப்பில் உரசியதில் சிமென்ட சிலாப் உடைந்து கீழே விழுந்தது. அப்போது வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்துக்கு நேற்று வந்திருந்த சிந்தாரிபேட்டையை சேர்ந்த புஷ்பா (40) என்பவரது காலில் சிலாப் விழுந்தது, இதில் அவரது காலில் விழுந்து காயம் ஏற்பட்டது,