திருவில்லிபுத்தூர், பிப்.12: திருவில்லிபுத்தூர் நம்பிநாயுடு தெருவைச் சேர்ந்த ராமசுப்பு (60). இவரது மனைவி வசந்தி (55). இவர், நேற்று காலை 6 மணிக்கு நடைப்பயிற்சி சென்றார். 7 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சக்கரகுளத்தெருவில், பழைய மின்வாரிய அலுவலகம் அருகே, பைக்கில் 25 மற்றும் 30 வயதுடைய இரண்டு வாலிபர்கள், வசந்தியின் கழுத்தில் இருந்த ஒன்பதே கால் பவுன் தாலிச்செயினை பறித்துவிட்டு, மின்னல் வேகத்தில் தப்பினர். இது குறித்து வசந்தி அளித்த புகாரின்பேரில், திருவில்லிபுத்தூர் நகர் இன்ஸ்பெக்டர் பவுல்ஏசுதாஸ், தாலிச்செயினை பறித்துச் சென்றவர்களை தேடி வருகிறார். இது தொடர்பாக கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.