ரேசன் கடை விற்பனையாளர் மீது புகார்

விருதுநகர், பிப். 12: வெம்பக்கோட்டை சத்திரப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த முத்துராஜ் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சத்திரப்பட்டி ரேசன் கடையில் எனது ரேசன்கார்டுக்கான இலவச வேஷ்டி, சேலை கேட்டேன். அங்கிருந்த விற்பனையாளர் வேல்விழி மற்றும் கிராம உதவியாளர் பொன்ராஜ் ஆகியோர் எனது கார்டுக்கு வேட்டி, சேலை வரவில்லை என கூறி அவதூறாக பேசி ரேசன் கார்டை முடக்கி விடுவோம் என மிரட்டுகின்றனர். இருவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து இலவச வேஷ்டி,சேலை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: