இடப்பிரச்னையில் இருதரப்பினர் மோதல்

ராஜபாளையம், பிப். 12:  ராஜபாளையம் அருகே, வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி (30). இவரது பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் பெரியாண்டவர் (35). இருவருக்கும் இடப்பிரச்னை தகராறு இருந்தது. நேற்று முன்தினம் முனியசாமி, சகோதரர்கள் இசக்கிமுத்து, நல்லதம்பி மற்றும் உறவினர் முருகன் ஆகியோர் வீட்டுக்கு பின்புறம் உள்ள காலியிடத்தில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதைக் கண்ட பெரியாண்டவர், அவரது மனைவி மேகலா, மகன் மாரிமுத்து, மருமகள் கற்பகவல்லி, உறவினர் ராமகிருஷ்ணன், ஆறுமுககனி ஆகியோர் வேலி அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி தகராறு செய்தனர்.

இதில் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு, அரிவாளால் வெடிக் கொண்டனர். இருதரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை மற்றும் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தளவாய்புரம் போலீசார் இருதரப்பினரும் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: