108 ஆம்புலன் வருவதற்கு தாமதம் படுகாயம் அடைந்தவரை மீட்ட பொதுமக்கள்

திருவில்லிபுத்தூர், பிப். 12: திருவில்லிபுத்தூர் அருகே, 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால், விபத்தில் படுகாயம் அடைந்தவரை, பொதுமக்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

திருவில்லிபுத்தூர் அருகே, இந்திரா நகரில் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், டூவீலரில் வந்து கொண்டிருந்த கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்ததமிழ் மணி (46), நிலை தடுமாறி விழுந்து, தலையில் பலத்த காயம் அடைந்தார். அப்பகுதியைச் சேர்ந்தோர், தகவல் கொடுத்ததும் 30 நிமிடங்களாக ஆம்புலன்ஸ் வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரை, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள மீட்டு, அந்த வழியாக வந்த காரில் ஏற்றி திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: