விருதுநகர், பிப். 12: விருதுநகர் அருகே, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வில் குளறுபடி என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் அருகே, மீசலூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கு 11 நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கடந்தாண்டு மார்ச் மாதம் தேர்வு செய்யப்பட்டனர். இதில், ஒருவரின் மனுவை, அதிகாரிகளுக்கு வேண்டியவர்களுக்காக ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த மார்ச்சில் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதில், கடந்தாண்டு டிசம்பரில் தீர்ப்பளித்த ஐகோர்ட் கிளை, ‘ரத்து செய்யப்பட்டவருடைய மனுவைப் பெற்று, மறுதேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் அதிகாரி மனு பெற மறுக்கிறார் என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.