பெரியகுளம், பிப்.12: பெரியகுளம் அருகே மேற்கு மலைத்தொடர்ச்சி கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட மலைப்பகுதியான தேவதானப்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதில் காட்டெருமை, சிறுத்தை, புலி,மான் சருகுமான், குரங்கு, முயல், பறவைகள் என பல்வேறு அரிய வகை விலங்கினங்கள் வாழ்ந்து வருன்கிறன.
இந்நிலையில் கோடைகாலம் துவங்கி விட்ட நிலையில் கும்பக்கரை அருவி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் அவைகளுக்கு தேவைப்படும் குடிநீர் அளவிற்கு வனத்துறையினர் தொட்டி அமைத்து அதில் நீர்நிரப்பி வருகின்றனர். வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து எந்த வித அச்சமின்றி வந்து நீரை குடித்து செல்வதற்காக அமைதியான சூழலில் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.