விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை ஓய்வூதியர் வருமானவரி அறிக்கை பிப்.15ம் தேதி கடைசி நாள்

மதுரை, பிப். 12: ஓய்வூதியர்கள் வருமானவரி அறிக்கையை தாக்கல் செய்ய வரும் 15ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் உள்ள சார்நிலைக் கருவூலங்கள் மற்றும் மாவட்ட கருவூலகத்தில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியத்துடன் குடும்ப ஓய்வூதியம் ஆகிய இரண்டு ஓய்வூதியம் பெறுபவர்கள் அனைவரும் 2018-19 ஆண்டிற்கான வருமானவரி அறிக்கையை இம்மாத 15ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கருவூலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வருடம் இதற்கு முன்பு சமர்ப்பித்தவர்கள் மீண்டும் சமர்ப்பிக்க தேவையில்லை என மாவட்ட கருவூலக அலுவலர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

Related Stories: