சஷ்டி விழா

அலங்காநல்லூர், பிப். 12: மதுரை, அழகர்மலை உச்சியில் பிரசித்திபெற்ற ஆறாவது படைவீடு சோலைமலை முருகன்கோயில் உள்ளது. இங்கு தைமாத சஷ்டிவிழா நேற்று நடந்தது. இதையொட்டி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாரதனைகளும் நடந்தன. இதில் ஏராளமாஜ பக்தர்கள் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி தரிசனம் செய்தனர். இதேபோல் அருகில் உள்ள வித்தகவிநாயகர், வேல் சன்னதியிலிலும், அலங்காநல்லூர் அய்யப்பன் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள பாலமுருகன் சன்னதியிலும் விசேஷ பூஜைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

Related Stories: