டாஸ்மாக் வடக்கு மாவட்ட மேலாளர் பொறுப்பேற்பு

மதுரை, பிப். 12: திருச்சி மாநகராட்சி உதவி ஆணையராக பணியாற்றியவர் ஷேக் அயூப். இவர், மதுரை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளராக நியமனம் ெசய்யப்பட்டிருந்தார். அதன்படி இவர் மதுரையில் பொறுப்பேற்று கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட மேலாளருக்கு, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அப்போது, மாவட்ட மேலாளர், ‘உங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள்’ என்றார். ஏற்கனவே வடக்கு மாவட்ட மேலாளராக பணியாற்றிய முருகானந்தம், மதுரை ஆர்டிஓ ஆக இடமாற்றம் செய்யப்பட்டார்.

Related Stories: