மதுரை, பிப். 12: இந்திய தேசிய லீக் நிர்வாகி மீதான வழக்கை திரும்ப ெபற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.திண்டுக்கல்ைல சேர்ந்தவர் அல் ஆசிக். இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர். இவர் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, திண்டுக்கல் மேற்கு சரக போலீசாருக்கும். அல் ஆசிக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பேரில், அல் ஆசிக் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராஜா உசேன், இவரை நேற்று சந்தித்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘அல் ஆசிக் மீது மீது பொய் வழக்கு புனைந்த திண்டுக்கல் மேற்கு சரக இன்ஸ்பெக்டர் சரவணனை பணிநீக்கம் செய்ய வேண்டும். வழக்கை அரசு திரும்ப பெற வேண்டும்’’ என்றார். மாநில நிர்வாகிகள் செய்யது அலி, செய்யது இப்ராகிம், அபுதாகீர் மற்றும் பலர் உடனிருந்தனர்.