மாவட்ட கபடி போட்டி ஆப்பனூர் அணி முதலிடம்

சாயல்குடி, பிப்.12:  முதுகுளத்தூரில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் ஆப்பனூர் அணி முதலிடம் பிடித்தது. முதுகுளத்தூர் கிழக்கு தெருவில் மாவட்ட அளவிலான கபடி போட்டியை தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் துவங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சேகர் வரவேற்றார். மாவட்ட அளவில் இளைஞர்களுக்கான கபடி போட்டி இரவு,பகலாக நடந்தது. இந்த போட்டியில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது. இதில் ஆப்பனூர் அணியினர் முதல் இடத்தையும், முதுகுளத்தூர் அணியினர் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கும், சிறப்பாக விளையாடிய கபடி வீரர்களுக்கும் ரொக்கப் பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

Related Stories: