இண்டேன் கேஸ் ஷோரும் திறப்பு

ராமநாதபுரம், பிப்.12:  ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் கிருஷ்ணா குழுமத்தின் சார்பில் இண்டேன் கேஸ் ஷோரும் திறப்பு விழா நேற்று நடந்தது. கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி சேர்மன் மாதவனூர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மதுரை இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் சீனியர் மேனேஜர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் துணை பொதுமேலாளர் நாகராஜன் ஷோருமை திறந்து வைத்தார்.

இளையான்குடி இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் மேனேஜர் கணேஷ் இண்டேன் கிடங்கை திறந்து வைத்தார். உதவி மேலாளர் ராஜமீனாட்சி, மேனேஜர் தியாகராஜன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். ரோட்டரி சங்க நிர்வாகிகள் தினேஷ் குமார், ரமேஷ், வழக்கறிஞர் முனியசாமி ஜேஎஸ்கே குரூப் லோகிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஷோரூம் உரிமையாளர் கேசவ கண்ணன், கிருஷ்ணா பள்ளி செயலாளர் ஜீவ லதா, பள்ளி முதல்வர் முத்துக்குமார் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.

Related Stories: