மாவட்ட யோகா போட்டி அரசு பள்ளி மாணவர் முதலிடம்

தொண்டி, பிப்.12: பள்ளிகளிடையேயான மாவட்ட அளவில் நடைபெற்ற யோகா போட்டியில், நம்புதாளை பள்ளி மாணவன் முதலிடம் பிடித்துள்ளான். மாணவரை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் சார்பில் நேற்று முன்தினம் மாவட்ட அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இதில் தொண்டி அருகே உள்ள நம்புதாளை அரசு உயர் நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவன் ஹாஜி அகமது முதலிடம் பிடித்தார். இவன் அடுத்த கட்டமாக மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டியில் பங்குபெற உள்ளார். இவனை பாராட்டி நேற்று பள்ளியில் விழா நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் ஆத்மநாதன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செய்யது யூசுப் முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியர் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர் வன்சென்ட் சேவியர் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் மாணவரை பாராட்டினர்.

Related Stories: