டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

திருப்புத்தூர், பிப். 12: திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் டூவிலர் பாலத்தில் மோதியதில் ஒருவர் பலியானார்.திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(56). இவர் நேற்று டூவிலரில் கீழச்சிவல்பட்டி ஓய் ரோட்டை கடந்து வந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி அருகில் உள்ள பாலத்தில் டூவிலர் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த ராமச்சந்திரனை திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: