மானாமதுரையில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

மானாமதுரை, பிப்.12: யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை அறியும் கருவி குறித்த விழிப்புணர்வு முகாம் மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலகர் ஜான்முகம்மது துவக்கி வைத்தார். வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை அறிந்து கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் விபிஏட்டி கருவிகள் பொருத்தப்பட்டன.இக்கருவி மூலம் ஓட்டளித்த வேட்பாளர், வரிசை எண், சின்னம் விபரங்கள் அடங்கிய தாளை 7 வினாடிகள் பார்க்கும் வகையில் பேரூராட்சி அலுவலகம் வந்த வாக்காளர்களுக்கு விளக்கப்பட்டது. மானாமதுரை தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சேகர், வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ், பேரூராட்சி தலைமை கணக்கர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: