விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிவகங்கை, பிப். 12: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்வதற்கான கருவியின் பயன்பாட்டை தெரிந்து கொள்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிக்கும் தலா நான்கு வாகனங்கள் மூலம் தேர்தல் அறிவிப்பு வரை ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அனைத்து வாக்குப்பதிவு மையங்கள் வாரியாக வாக்காளர்களை சந்தித்து வாக்கினை உறுதி செய்யும் கருவியின் செயல் குறித்து விளக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் வேட்பாளர்கள் வரிசை எண், பெயர் மற்றும் வேட்பாளரின் சின்னம் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய அச்சிட்ட தாளை 7வினாடிகளுக்கு பார்க்கும் வகையிலும், வாக்களித்த வேட்பாளருக்குதான் வாக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யவும், சரிபார்க்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்தும் விளக்கப்படும். இந்நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு தாசில்தார் ரமேஷ், சிவகங்கை தாசில்தார் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: