வருமான வரித்துறையினர் திடீர் சோதனை ஆம்பூரில்

ஆம்பூர், பிப்.12: ஆம்பூரில் நேற்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். ஆம்பூர் பஜாரில் தனியாருக்கு சொந்தமான வணிக நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு நேற்று காலை 10.30 மணியளவில் வருமான வரித்துறையினர் 3 கார்களில் வந்தனர். அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் காரில் வந்த 10 பேர் கொண்ட குழுவினர் 3 குழுக்களாக பிரிந்து சென்று சோதனை நடத்தினர்.தொடர்ந்து, அந்த நிறுவனத்தில் இருந்த வருமான வரி தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.

Related Stories: