மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பறிமுதல் வாகனங்கள் நாளை ஏலம்: காவல்துறை அறிவிப்பு

காஞ்சிபுரம், பிப்.12: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை  ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை காலை 10  மணியளவில் சின்ன காஞ்சிபுரம், திருவீதிப் பள்ளத்தில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு  அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளன.எஸ்பி சந்தோஷ் ஹதிமானி முன்னிலையில் நடைபெறும் இந்த  ஏலத்தில், ஏலம் கேட்க விரும்புபவர்கள் தங்கள் ரேஷன் கார்டு நகலுடன் வாகனத்துக்கு முன் வைப்புத் தொகையாக ₹1000 டெபாசிட்டாக செலுத்த வேண்டும். டெபாசிட் தொகையினை ஏலம்  நடைபெறும்போது, காலை 7 மணி முதல் 9.30 மணிக்குள் திருவீதி பள்ளத்தில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.இந்த ஏலத்தில் வாகனம் ஏலம் எடுத்தவர்கள் கேட்ட தொகையுடன் விற்பனை வரி 12 சதவீதத்தை உடனடியாக செலுத்த வேண்டும்.ஏலம் கேட்ட தொகையில் டெபாசிட் தொகை சரிசெய்யப் படும். இதில் கலந்துகொண்டு ஏலம் எடுக்காதவர்களுக்கு டெபாசிட் தொகை ஏலத்தின் முடிவில் திருப்பித் தரப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: