செய்யாறு, பிப்.8: செய்யாறு அருகே அண்ணியுடன் தனிமையில் பேசிய, வாலிபரை அறையில் பூட்டி வைத்து தர்மஅடி கொடுத்த சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் பரத்(25), துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். காமராஜ் நகரை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவரது சகோதரர்கள் சபீர்(30), காதர்(29), தாயார் பாத்திமா பீபீ(50).இந்நிலையில், இளம்பெண்ணுக்கும், பரத்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி சந்தித்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த, சபீர், காதர், மாமியார் பாத்திமா பீபீ பலமுறை கண்டித்தும் பழக்கத்தை கைவிடவில்லையாம்.இதற்கிடையில், கடந்த 5ம் தேதி இரவு 11.30 மணியளவில் இளம்பெண், பரத்திற்கு போன் செய்து தனது வீட்டிற்கு வரவழைத்தாராம். அப்போது, இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது கையும், களவுமாக பிடித்த, சபீர், காதர், பாத்திமா பீபீ ஆகியோர் இளம்பெண்ணையும், பரத்தையும் சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், பரத்தை ஒரு அறையில் வைத்து பூட்டி, சகோதரர்கள் இருவரும் சேர்ந்து அடித்து உதைத்தார்களாம்.