தண்டராம்பட்டு, பிப்.8: தண்டராம்பட்டு அருகே ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் சிவபிரகாஷ்(36) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஆசிரியர் சிவபிரகாஷ் கடந்த மாதம் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் சார்பில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார். இதையடுத்து அவர் பெரியகுளம் அரசு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது.இதையறிந்த, பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து, திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.