வானில் வெண் புகையுடன் விழுந்த விண்கல் பொதுமக்கள் பீதி ஜோலார்பேட்டை அருகே

ஜோலார்பேட்டை, பிப்.8: ஜோலார்பேட்டை அடுத்த சந்தை கோடியூர் பஜனை கோயில் தெரு பகுதியை சேர்ந்த பொது மக்கள் நேற்று காலை வானில் ஏதோ மர்ம பொருள் தீ பிடித்து ‘வி’ வடிவில் வெண் புகையுடன் விண்ணிலிருந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனை சிலர் செல்போனில் படம் பிடித்தனர்.இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மைய அலுவலர் விஜயனை தொடர்பு கொண்டு கேட்டபோது, `வானில் ஏற்படும் சில மாற்றங்களால் அடிக்கடி விண்கற்கள் பூமியை நோக்கி வந்து கீழே விழுவது வழக்கமான ஒன்று. அதேபோன்று தான் இந்த நிகழ்வும் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இவை வரும் வழியிலேயே சாம்பலாகி மறைந்து விடும். இருந்தாலும் ஒரு சில நேரங்களில் பூமியை தாக்கவும் செய்கிறது. இது பூமி மீது விழுந்திருந்தால் அதன் நிகழ்வு எங்களுக்கு தெரிந்திருக்கும். எனவே, அவை விண்கல்லாகத்தான் இருக்கும்’ என்றார்.

Related Stories: