சோலார் பேனல் விளக்குகள் விற்பனை தொடக்கம் வேலூர் தலைமை தபால் நிலையத்தில்

வேலூர், பிப்.8:வேலூர் தலைமை தபால் நிலையத்தில் சோலார் பேனல் விளக்குகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.சூரிய மின்சக்தி பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இப்பொருட்களை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தும் வகையில் விலை தள்ளுபடி உள்ளிட்ட சலுகை அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் சோலார் பேனல் விளக்குகள் விற்பனை அண்மையில் தொடங்கியது.

இதேபோல் வேலூர் தலைமை தபால் நிலையத்தில் சோலார் பேனல் விளக்குகள் விற்பனை தொடங்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் சோலார் பேனல் விளக்குகள் விற்பனை தொடங்கியுள்ளது.இவை ₹499, ₹1,499, ₹2,299, ₹3,499, ₹4,499 ஆகிய விலைகளில் சோலார் பேனல்கள் விற்கப்படுகிறது. வாட்டர் புரூப் மற்றும் பேட்டரிகளுக்கு 5 ஆண்டு உத்தரவாதமும், விளக்குகளுக்கு 2 ஆண்டு உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. இதில் பழுது ஏதேனும் ஏற்பட்டால் அந்தந்த தபால் நிலையத்தில் மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: