இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் சேத்துப்பட்டில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வலியுறுத்தி

சேத்துப்பட்டு, பிப். 6: சேத்துப்பட்டு தாலுகா அலுவலகம் முன் நேற்று இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சங்கர், மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி குரூஸ் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில், சேத்துப்பட்டில் அரசு கலைக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் தொடங்க வேண்டும். சேத்துப்பட்டு வட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புறங்களில் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும். சேத்துப்பட்டில் காய்கனி மார்க்கெட் அமைத்திட வேண்டும். தவணி, மகாதேவி மங்கலம் ஆகிய கிராமங்கள் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வந்தவாசி தாலுகாவில் உள்ளதால் இந்த இரண்டு கிராமங்களையும் அருகே உள்ள சேத்துப்பட்டு தாலுகாவில் இணைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.       

சேத்துப்பட்டு தாலுகா அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Related Stories: