கிராம தேவதை காங்கியம்மன் வீதிஉலா திரளான பக்தர்கள் தரிசனம் வேதபுரீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவம்

செய்யாறு, பிப்.5: செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு, நேற்று கிராம தேவதை காங்கியம்மன் சிம்ம வாகனத்தில் வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.செய்யாறு திருவத்தூரில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற வேதபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் டங்குகிறது.இதையொட்டி, நேற்று கிராம தேவதை காங்கியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இன்று விநாயகர் மூஷின வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். பிரமோற்சவத்தையொட்டி செய்யாறு நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் பிரமோற்சவத்தை முன்னிட்டு நேற்று, கிராம தேவதை காங்கியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Related Stories: