அரியலூர்,ஜன,31: அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களில் அரியலூர் வட்டத்தில் மல்லூர், புங்கங்குழி ஆகிய கிராமங்களிலும், உடையார் பாளையம் வட்டத்தில் நடுவலூர் (மே), இடங்கண்ணி ஆகிய கிராமங்களில் வருவாய் திட்ட முகாம் நாளை (1ந்தேதி) வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகிய வற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.