ஜெயங்கொண்டம், ஜன.31: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக ஊராட்சி சபை கூட்டம் கங்கைகொண்ட சோழபுரம், முத்துசேர்வாமடம், பிள்ளைபாளையம், தழுதாழைமேடு, உட்கோட்டை, குருவாலப்பர் கோயில் ஆகிய ஊராட்சிகளில் கூட்டம் நடை பெற்றது. திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். ரேஷன் கடைகளில் புழுங்கல் அரிசி வழங்கவில்லை என புகார் தெரிவித்த கிராம மக்கள், 65ஆண்டுகளாக தூர் வாரப்படாத பாண்டியன் ஏரியை தூர்வார வேண்டும். வானவநல்லூர் உள்ள நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தி தர வேண் டும். வளவனேரி டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும். குருவாலப்பர்கோயில் கிராமத்தில் கொக்கரனையில் முடக்கபடாமல் உள்ள தொகுப்பு வீடுகளை உடன் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.